பசுபதி பாண்டியன் அவர்களின் 12 வது நினைவு தினத்தை முன்னிட்டு தேனியில் இரத்ததான முகாம் நடைபெற்றது.

பசுபதி பாண்டியன் அவர்களின் 12 வது நினைவு தினத்தை முன்னிட்டு தேனியில் இரத்ததான முகாம் நடைபெற்றது. தேனி அல்லிநகரம் பகுதியில் அமைந்துள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற ரத்ததான முகாமில் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு இரத்தம் தானம் செய்தனர். ரத்த தானம் செய்தவர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் மாநில பொதுச் செயலாளர் சந்தான பிரியா அவர்களின் வழிகாட்டுதலின் படி மாநிலச் செயலாளர் நடராஜன் முன்னிலையில் துவக்கி வைத்தார் மாபெரும் ரத்ததான முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் சதீஷ்குமார் தேனி நகர செயலாளர் நகர இணை செயலாளர் சிவா நகர பொருளாளர் முருகேசன் நகர இளைஞரணி செயலாளர் சேது தேனி வடக்கு மாவட்ட செயலாளர் லட்சுமி மணி தேனி வடக்கு மாவட்ட இணை செயலாளர் அலெக்ஸ் பாண்டியன் மற்றும் தென் மண்டல செயலாளர் கருப்பையா பாண்டியன் மற்றும் தேனி மருத்துவக் கல்லூரி ரத்த வங்கி மருத்துவ அதிகாரி பிரியா ஆகியோர் மற்றும் ஏழாவது வார்டு கவுன்சிலர் செல்வி கலந்து கொண்டு சிறப்பித்தார்.