நீர் நிலைகளை பாதுகாப்பவர்களுக்கு 1 லட்சம் ரூபாயுடன் இந்த ஆண்டு 100 பேருக்கு அரசு விருது வழங்க உள்ளதாக தேனியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சுற்றுச்சூழல் அமைச்சர் மெய்ய நாதன் தெரிவித்தார்.

தேனி மாவட்ட தன்னார்வலர்கள் மற்றும் தேனி பனை நடவு குழுவினர் ஆறாம் ஆண்டு தொடக்க விழா நிகழ்ச்சி தேனி அல்லிநகரம் பகுதியில் நடைபெற்றது. இதில் சுற்றுச்சூழல் அமைச்சர் மெய்யநாதன் மற்றும் பனை நடும் தன்னார்வ குழுவினர் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் மஞ்சப்பை உபயோகிப்பது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தினால் பின்னர் நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் மெய்யநாதன் கூறும்போது சுற்றுச்சூழலை பாதுகாக்க அரசு மட்டும் செயல்பட்டால் போதாது இதுபோன்ற தன்னார்வல அமைப்புகளும் இணைந்து சுற்றுச்சூழலை காக்க வேண்டும். எங்கள் பகுதியில் கஜா புயல் தாக்கிய போது ஏராளமான தென்னை மரங்கள் சாய்ந்தனம் ஆனால் ஒரு பனைமரம் கூட புயலில் விழாமல் புயலை தடுத்து நிறுத்தியது என பனை மரம் நடுதல் குறித்து பேசினார். நீர் நிலைகளை பாதுகாப்பவர்களுக்கு சுமார் 100 பேரை தேர்ந்தெடுத்து ஒரு லட்சம் பணத்துடன் இந்தாண்டு அரசு விருதுகள் வழங்க உள்ளோம் என அமைச்சர் கூறினார்.