மேட்டுப்பாளையம் நகராட்சி நகர விற்பனை குழு உறுப்பினர் தேர்தலில் மேட்டுப்பாளையம் தாலுகா சி ஐ டி யு பொது தொழிலாளர் சங்கத்தினர் அபார வெற்றி!

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் சாலையோரகடைகளை முறைப்படுத்தவும் அதற்காக நகர விற்பனைக் குழுவை உருவாக்கவும் முடிவு செய்யப்பட்டது இதன்படி 848 சாலையோர வியாபாரிகளுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டது மேலும் நகர விற்பனை குழு உறுப்பினர்களாக இவர்களின் ஆறு பேரை தேர்வு செய்ய மேட்டுப்பாளையம் நகராட்சி அலுவலகத்தில் தேர்தல் அறிவிக்கப்பட்டது இத்தேர்தலில் போட்டிடும் வேட்பாளர்களிடம் வேட்பு மனுக்களை பெறுவதற்கு 26.07.2024 முதல் 02.08.2024 வரை பெறப்படும் என மேட்டுப்பாளையம் நகராட்சி நிர்வாகத்தால் அறிவிக்கப்பட்டு இருந்தது மேலும் வேட்பு மனு தாக்கல் செய்யும் இறுதி நாளன்று மேட்டுப்பாளையம் தாலுக்கா CITU சாலையோர வியாபாரிகள் சங்க சார்பில் அப்துல் சமது. ஆனந்தாயி, கனகமணி, ரங்கநாதன்,யாசர் அராபத். சலீம் ஆகிய ஆறு பேர் 2000 ரூபாய் வைப்புத் தொகை செலுத்தி நகராட்சி அலுவலகத்தில் நகராட்சி அதிகாரியிடம் வேட்பு மனு தாக்கல் செய்தனர் அறிவிக்கப்பட்ட நகராட்சி நகர விற்பனை குழு உறுப்பினர் தேர்தலில் வேட்பு மனு பரிசீலனை வரும் 5 ம்தேதி நடைபெற்றது வேட்பு மனு திரும்ப பெரும் நாள் மற்றும் இறுதிப்பட்டியல் 6ம் தேதி வெளியிடப்பட்டது மேட்டுப்பாளையம் நகராட்சிநிர்வாகத்தால் நடத்தப்பட்ட மேட்டுப்பாளையம் நகராட்சி நகர விற்பனைக்குழு உறுப்பினர் தேர்தலில் மேட்டுப்பாளையம் தாலுக்கா CITU சாலையோர வியாபாரிகள் சங்க சார்பில் அப்துல் சமது. ஆனந்தாயி, கனகமணி, ரங்கநாதன்,யாசர் அராபத். சலீம் ஆகிய ஆறு வேட்பாளர்கள் போட்டியின்றி ஆறு இடங்களிலும் வென்றுள்ளனர் மேலும் தேர்தல் வெற்றி சான்றை மேட்டுப்பாளையம் நகராட்சி தேர்தல் நடத்தும் அலுவலர் அறிவு செல்வம் வழங்கினார் வெற்றி பெற்ற வேட்பாளர்களை வியாபாரிகளுக்கான மத்திய மாநில அரசு கொண்டுவரும் அனைத்து சலுகைகளையும் பெற்றுத் தருவோம் என்று அனைவரும் உறுதிமொழி எடுத்தனர் இவர்களை பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் வாழ்த்திர்.